சேலம் வெள்ளி வியாபாரி கொலை வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த குற்றவாளி !

சேலம் வெள்ளி வியாபாரி கொலை வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த குற்றவாளி !

சேலம் வெள்ளி வியாபாரி கொலை வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த குற்றவாளி

சேலம் வெள்ளி வியாபாரி கொலை வழக்கில் மாறுவேடத்தில் சுற்றிய குற்றவாளி கோர்ட்டில் சரணடைந்தார்.
சேலம் வெள்ளி வியாபாரி சங்கர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் சங்கரின் மைத்துனர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சங்கர் கொலையில் கூலிப்படைக்கு தொடர்பு இருப்பதுதெரிய வந்தது. மேலும் ரவுடி கோழி பாஸ்கருக்கும் கொலையில் தொடர்பு உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. ரவுடி கோழி பாஸ்கரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். போலீசாருக்கு அடையாளம் தெரியாமல் இருக்க கோழி பாஸ்கர், தனக்கு தானே மொட்டையடித்துக் கொண்டு சுற்றி திரிந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இருந்தாலும் அவரை கைது செய்ய போலீசார் நெருங்கிய நேரத்தில் அவர் நேற்று சேலம் கோர்ட்டில் சரண் அடைந்ததாக போலீசார் கூறினர்.

Tags

Next Story