சேலம் வெள்ளி வியாபாரி கார் ஏற்றி கொலை

சேலம் வெள்ளி வியாபாரி கார் ஏற்றி கொலை

காவல் நிலையம் 

சேலம் வெள்ளி வியாபாரி கார் ஏற்றி கொலைசெய்த பிரபல ரவுடியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (45), வெள்ளி வியாபாரி. இவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போது வெள்ளி வியாபாரி சங்கரின் தங்கை கணவர் சுபாஷ்பாபு கூலிப்படையை ஏவி அவரை கார் ஏற்றி கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து சுபாஷ்பாபுவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த அந்த பிரபல ரவுடி தலைமையிலான கூலிப்படையினர் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையிலான போலீசார் தேடினர்.

அப்போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் அவரது நண்பர்கள் 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். அதில் ஒருவருக்கு கொலையில் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் அனுப்பி விட்டனர்.

மற்றொருவரிடம் விசாரணை நடத்தியதில் இந்த கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே கொலை செய்ய பயன்படுத்திய கார் ஈேராடு மாவட்டம் பவானி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அந்த காரை போலீசார் நேற்று மீட்டனர். இந்த கொலையில் தொடர்புடைய பிரபல ரவுடி மற்றும் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story