தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சேலம் மாணவர்கள் சாதனை

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சேலம் மாணவர்கள் சாதனை

வெற்றி பெற்ற மாணவர்கள்

இந்திய லீ ஷாவலின் குங் பூ விளையாட்டு அகாடமி சார்பில் நடந்த தேசிய கராத்தே போட்டியில் சேலம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
இந்திய லீ ஷாவலின் குங் பூ விளையாட்டு அகாடமி சார்பில் 2-வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. இதில் கராத்தே புடாகான் பயிற்சியாளர் கே.யுவராஜ் தலைமையில் அபுதாகீர், அப்துல் இப்ராகிம், மோனீஷ், நாகயுவன், ஜோதிபிரியா ஆகிய மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தி பரிசு கோப்பை, சான்றிதழ்கள் பெற்று சாதனை படைத்தனர்.

Tags

Next Story