சேலம் சுப்பிரமணியநகர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சேலம் சுப்பிரமணியநகர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்


சேலம் சுப்பிரமணியநகர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.


சேலம் சுப்பிரமணியநகர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

சேலம் சுப்பிரமணியநகர் விரிவாக்கம் பகுதி செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாக சாலை பூஜைகள் நடந்தன. பல்வேறு தீர்த்தங்களில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு கோபுரங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோமாதா பூஜை, தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, பிரம்ம பூஜை, வடுகு பூஜை நடந்தன. அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டன.

கும்பாபிஷேகத்தை சுருளி மலை நீலகண்ட ரிஷி தலைமையில் சித்த குருமார்கள் நாகேந்திரன், மனோகரன் மற்றும் குழுவினர் நடத்தினர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை சேலம் சுப்பிரமணிய நகர் விரிவாக்கம் பகுதி மனை உரிமையாளர்கள் நல சங்க தலைவர் அரிமா கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் நிர்மலா, பொருளாளர் சிவராஜன், விழா ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம், லோகம்பாள், அரிமா மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story