கிரிக்கெட் போட்டியில் சேலம் அணி சாம்பியன்

கிரிக்கெட் போட்டியில் சேலம் அணி சாம்பியன்

பாரா மெடிக்கல் லேப் கல்வி நலச்சங்கம் சார்பில் நடந்த மாநில கிரிக்கெட் போட்டியில் சேலம் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.


பாரா மெடிக்கல் லேப் கல்வி நலச்சங்கம் சார்பில் நடந்த மாநில கிரிக்கெட் போட்டியில் சேலம் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

லேப் டெக்னீசியன் தினம் மற்றும் பாரா மெடிக்கல் லேப் கல்வி நலச்சங்கத்தின் 25-வது ஆண்டையொட்டி லேப் டெக்னீசியன்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி சேலம் கந்தாஸ்ரமத்தில் உள்ள எஸ்.ஆர்.பி. மைதானத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 15 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் சேலம் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

பரிசளிப்பு விழாவுக்கு சங்க மாநில செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். தேசிய தலைவர் காளிதாசன், மாநில இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், என்.ஏ.பி.எல். இயக்குனர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் கலா வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் துரைசாமி, பொருளாளர் சம்பத்குமார், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பை வழங்கினர். மாவட்ட தலைவர் நிஷார் அகமது, செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் சவுந்திரராஜன், இணை செயலாளர் நீலமேகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story