சேலத்தில் வேலைக்கு சென்ற பட்டதாரி பெண்கள் 2 பேர் மாயம்

சேலத்தில் வேலைக்கு சென்ற பட்டதாரி பெண்கள் 2 பேர் மாயம்
இரண்டு பெண்கள் மாயம் என புகார்
திடீரென மாயமானதால் இரு பெண்களை காணவில்லை என்று புகார்


சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்தவர் நித்யா (28). இவர் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 17ம்தேதி வேலைக்கு சென்றவர் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாய், அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் செட்டிசாவடி பகுதியை சேர்ந்தவர் லீகா (24). பட்டதாரியான இவர் அழகாபுரம் பகுதியில் உள்ள பிரிண்ட் லேப் ஷாப்பில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 17ம்தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அப்பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story