சேலம் பெண் போலீசிடம் செல்போனில் பேசி தொல்லை !!

சேலம் பெண் போலீசிடம் செல்போனில் பேசி தொல்லை !!

கைப்பேசி

பெண் போலீஸ் புகார் கூறிய அந்த போலீஸ்காரருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ஒருவர் சரக டி.ஐ.ஜி. உமாவிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் எனது செல்போன் எண்ணுக்கு கடந்த 7-ந் தேதி இரவு மிஸ்டு கால் ஒன்று வந்தது. இதையடுத்து அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு நான் பேசினேன். அப்போது எதிர்முனையில் பேசியவர் மன்னார்குடியில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் தகாத முறையில் பேசி எனக்கு தொல்லை கொடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பெண் போலீஸ் புகார் கூறிய அந்த போலீஸ்காரருக்குசம்மன்அனுப்பி விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags

Next Story