பழனி அருகே 3 உரக்கடைகளுக்கு விற்பனை தடை

பழனி அருகே 3 உரக்கடைகளுக்கு  விற்பனை தடை

ஆய்வு 

பழனி, தொப்பம்பட்டி பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியப்பட்ட 3 உரக் கடைகளில் உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு பருவ வேளாண்மைக்குத் தேவையான ரசாயன உரங்கள், 72 மொத்த விற்பனையாளா்கள், 564 சில்லரை விற்பனையாளா்கள் மூலம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேளாண்மைத் துறை அலுவலா்களை கொண்ட 3 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொள்ள வேளாண்மை இணை இயக்குநா் அ. அனுசுயா அறிவுறுத்தினாா்.இதில் பதிவேடுகள் முறையாக பராமரிக்காத 3 கடைகளுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

Tags

Next Story