கடத்தூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை அமோகம்

கடத்தூர் வெற்றிலை வாரச்சந்தையில் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ. 10,000 முதல் அதிகபட்சமாக ரூ. 23,000 வரை விற்பனையானது.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று நடந்த சந்தையில் தர்மபுரி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர்.

மணியம்பாடி, நல்லகுட்டலஹள்ளி, கோம்பை, அஸ்தகியூர், மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்த வெற்றிலைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம் 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை, 16 ஆயிரம் முதல் அதிகபட் சமாக 21 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில் ஆரம்ப விலை 10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 23 ஆயிரத்திற்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், 2000 விலை அதிகரித்தது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.5.60 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனையானது.

Tags

Next Story