விடுதலை களம் கட்சி சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு வீரவணக்கம்

விடுதலை களம் கட்சி சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு வீரவணக்கம்
வீரவணக்கம் செலுத்திய கட்சியினர்
விடுதலை களம் கட்சி சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரரும், அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய மாமன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் 265 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, விடுதலைக் களம் கட்சி சார்பில், கரூர் அடுத்த கோடங்கிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் நாகராஜன் தலைமையில் மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில துணைத்தலைவர் லட்சுமிபதிராஜ், கரூர் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

அப்போது மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அமைச்சரவையில் பணியாற்றிய ஊமத்துரை உள்ளிட்ட வீரர்களுக்கும் வாழ்த்து கோசம் எழுப்பி புகழஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story