அமமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

அமமுக நாமக்கல் வடக்கு மாவட்ட கழகம், மாவட்ட மாணவர் அணி சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முன்பு மொழிப்போர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன், அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பகுதிகளிலும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் வடக்கு மாவட்ட கழகம் மற்றும் மாவட்ட மாணவர் அணி சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முன்பு மாவட்டக் கழக செயலாளர் ஏ.பி. பழனிவேல், அவர்கள் முன்னிலையில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் மேகதனிஸ் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வீர முழக்கம் கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்விற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ். பன்னீர்செல்வம், மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் கா. முருகன், அம்பிகா, மாவட்ட கழகப் பொருளாளர் வழக்கறிஞர் அன்புச்செழியன், ராசிபுரம் நகர கழக செயலாளர் எஸ்.வேலுசாமி, பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார் மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story