கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

பொங்கல் விழா

திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுவிவேகானந்தா மகளிர் கல்வி நிறுவன வளாகத்தில்கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 7,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது,விழாவை ஒட்டி பொங்கல் வைத்த பெண்கள் பொங்கல் பானை சுற்றி கும்மியடித்து பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். சக தோழிகளுடன் ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதன்மை அதிகாரி சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் பேபி ஷகீலா, கல்லூரி பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story