அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
சமத்துவ பொங்கல்
திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்ப்பில் அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுலா துறையின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்து கொண்டார். பொங்கல் திருநாள் என்பது நமது மாவட்டத்திற்கு தனிச்சிறப்பானது. பொங்கல் தினத்தன்று நமக்கு கிடைத்த அனைத்து நல்ல விஷயங்களுக்கும் நன்றி தெரிவித்து திருநாளினை சிறப்பாக கொண்டாடுங்கள் அனைவருக்கும் பொங்கல் தின வாழ்த்துக்களை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் . இதனை தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் ஜெயந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story