கயத்தாறு அருகே துவக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

கயத்தாறு அருகே துவக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழா 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. 

தமிழர் திருநாளாம் தை பொங்கல் விழாவில் மாணவர்கள் தமிழரின் பாரம்பரிய உடையணிந்து அசத்தினர். மாவட்ட கவுண்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இதில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் இராஜ், நல்லாசிரியர் இராஜையா, ஆசிரியை ஜெயராணி, ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story