ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக கல்லூரிகள் பள்ளிகள் அரசு அலுவலகங்கள் என பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் கரகாட்டம், சிலம்பாட்டம் ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது மேலும் பானை உடைப்பது, முளைப்பாரி ஏந்தி சென்று மாணவிகள் கும்மி அடிப்பது போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்தும் பொங்கலோ பொங்கல் என சத்தமிட்டு சிறப்பாக கொண்டாடினர்.

Tags

Next Story