பிடாநேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல்

பிடாநேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல்

சமத்துவ பொங்கல் விழா 

நாசரேத் அருகே தைலாபுரம்  அங்கன் வாடி மையத்தில்  நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் அங்கன்வாடி பணியாளர்கள்,மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாசரேத் அருகே உள்ள பிடாநேரி ஊராட்சிக்குட் பட்ட தைலாபுரம் அங்கன் வாடி மையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மெர்சிபாண்டியன் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். அங்கன்வாடி பொறுப்பாளர் பாத்திமா செல்வக்கனி முன்னிலை வகித்தார். பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர், அங்கன்வாடி பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story