போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் 

விழுப்புரம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் காவலர்கள் பொங்கலிட்டு கொண்டாடினர்.

விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். இதில் போலீசார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அமைச்சுப்பணியாளர்கள் பலர் கலந்துகொண்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கலை கொண்டாடி வழிபட்டனர்.

இவ்விழாவில் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராமன், ரங்கராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story