சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீ விபத்து - 2 குருக்களுக்கு தீக்காயம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீ விபத்து - 2 குருக்களுக்கு  தீக்காயம்

சமயபுரம் மாரியம்மன் 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் இன்று அதிகாலை்5.30 மணியளயில் உற்சவர் அம்மனுக்கு தீபாராதனை காட்டியபோது வெட்டிவேர் பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குருக்களுக்கு தீக்காயம். தனியார் மருத்துவமனையில் அனுமதி.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாத்தினர். இந்நிலையில் சன்னிதானத்தில் அமைந்துள்ள உற்சவ அம்மனுக்கு பூஜை செய்யும் பணியில் கோவில் குருக்களான குருநாதன் மற்றும் நாகநாதன் என்ற 2 குருக்கள் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 5.30 மணிக்கு உற்சவ அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது கோவில் குருக்கள் குருநாதன் என்பவர் தீபாராதனை தட்டை மேலே உயர்த்தியபோது அம்மனுக்கு அமைக்கப்பட்டிருந்த வெட்டிவேர் பந்தலில் தீ பட்டு திடீரென தீப்பற்றி எரிந்து கீழே விழுந்தது. இதில் குருய்யநாதன் மற்றும் நாகநாதன் ஆகிய இரண்டு குருக்களுக்கு உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டது. இதனைக்கண்ட கோவில் ஊழியர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.் அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர். பின்னர் அம்மனுக்கு பால் மற்றும் பரிகார பூஜைகள் நடைப்பெற்று பகத்தர்களை தரிசனத்திற்க்கு அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story