சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி பதியில் கலிவேட்டை

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி பதியில் கலிவேட்டை

கலிவேட்டை

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி பதியில் கலிவேட்டைக்கு புறப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மாலை பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்று வருகிறது. விழாவின் எட்டாம் நாளான நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மாலையில் பழங்கள் மற்றும் மலர்களால் அலங்காரத்துடன் ஐயாவுக்கு சிறப்பு பணிவிடை நடந்தது.

தொடர்ந்து அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை பதி முன்பில் இருந்து புறப்பட்ட வெள்ளை குதிரை வாகனம் 4 ரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரை அடைந்தது. அங்கு அய்யாவழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகர அரகரா என்ற பக்தி கோஷத்தோடு ஐயா கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 11 மணிக்கு வாகனம் சாமிதோப்பு தலைமை பதி வந்தடைந்தது. இன்று சனிக்கிழமை இரவு அம்மன் வாகன பவனியும், நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திர வாகன பணியும் நடக்கிறது. 3-ம் தேதி திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

Tags

Next Story