சேலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்வுக்கான மாதிரி தேர்வு

சேலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்வுக்கான மாதிரி தேர்வு

மாதிரி தேர்வில் பங்கேற்றவர்கள்

சேலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற்றது.

சேலம் கோரிமேட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் உள்ளது. இந்த மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அரசு பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நேற்று குரூப்-4 தேர்வுக்கான முழு மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 142 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு எழுதினர்.

தேர்வர்களுக்கு குரூப்-4 தேர்வில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும்? அதை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்து இந்த மாதிரி தேர்வு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர் மணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story