மாதிரி நேர்காணல் பயிற்சி வகுப்பு

மாதிரி நேர்காணல் பயிற்சி வகுப்பு

ஆட்சியர் ஜெயசீலன் 

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகளுக்கான இலவச மாதிரி நேர்காணல் பயிற்சி விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் COMBINED CIVIL SERVICES EXAMINATION –II (INTERVIEW POSTS/NON INTERVIEW POSTS) தேர்விற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் பிப்ரவரி 12 முதல் 17ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக வரும் இன்று மாவட்ட அளவிலான இலவச மாதிரி நேர்காணல் நடத்தப்பட உள்ளது. இந்த, இலவச மாதிரி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பப்படும் தேர்வர்கள் https://forms.gle/adDpYSvXm7gkRcVx9 Google Form ல் பூர்த்தி செய்ய வேண்டும். மாதிரி தேர்வு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 9360171161 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story