மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

காவல் நிலையம் 

விருதுநகர் அருகே ஆனைக்குட்டத்தில் கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் கிராம நிர்வாக அலுவலர் யாகராஜன் இவருக்கு விருதுநகர் மாவட்டம் ஆனைக்குட்டம் கிராம இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அருகே உள்ள ஓடைப்பகுதியில் திருட்டுத்தனமாக கிராவல் மண் அள்ளுவதாக தகவல் கிடைத்தது.

இதை அடுத்து அந்த தகவலின் படி அங்கு வந்த வருவாய் வட்டாட்சியர் தலைமையில் சிவகாசி மண்டல துணை வட்டாட்சியர் திருத்தங்கள் குருவட்ட வருவாய் ஆட்சியருடன் ஆனை கூட்டம் கிராம நிர்வாக உதவியாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அங்கு சிவகாசி தாலுகா வெள்ளூர் பகுதியைச் சார்ந்த மகேஷ் குமார் மற்றும் பால்பாண்டி ஆகிய இருவரும் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தெரியவந்தது .அவரிடம் இருந்த ஒன்றரை யூனிட் மணலை கைப்பற்றிய காவல் துறையினர் இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story