மணல் கடத்தல் - மூவர் கைது

மணல் கடத்தல் - மூவர் கைது
மணல் கடத்தல் 
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த டி.ஒரத்துார் அருகே கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை பிடித்து பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ், 37; சேந்தமங்கலம், மகேந்திரன், 40; அமுல்ராஜ், 39; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags

Next Story