இருசக்கர வாகனத்தில் மணல் திருட்டு - 6 பேர் கைது

இருசக்கர வாகனத்தில் மணல் திருட்டு -  6 பேர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட மணல் மூட்டைகள் 

கொரடாச்சேரி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் மணல் திருடிய கூத்தாநல்லூர் அகர பொதக்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் முரளி தாஸ் ,செல்வமணி என்பவரின் மகன் சரண்ராஜ் ,செல்வம் என்பவரின் மகன் செங்குட்டுவன் ,காமராஜ் மகன் தினேஷ்குமார், கலியபெருமாள் மகன் தினேஷ்குமார், வாழாசேரி காலனி தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் அழகேசன் ஆகிய ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆறு நபர்களும் கூட்டாக சேர்ந்து மணல் திருடி கூத்தாநல்லூர் பொதக்குடி அத்திக்கடை போன்ற பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது . இதனை தொடர்ந்து ஆறு நபர்களையும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து மணல் திருட பயன்படுத்திய நான்கு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story