சாத்தான்குளம் அருகே மணல் லாரி பறிமுதல்: ஒருவா் கைது

சாத்தான்குளம் அருகே மணல் லாரி பறிமுதல்: ஒருவா் கைது

பைல் படம்

சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி கிரசா் மணல் ஏற்றிச் சென்ற லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனா்.
பன்னம்பாறை விலக்கில் வருவாய்த் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அனுமதியின்றி அவ்வழியாக கிரசா் மணல் ஏற்றிச்சென்ற லாரியைக் கைப்பற்றினா். மேலும், லாரியையும், அதன் ஓட்டுநரான நாசரேத் வெள்ளமடம் கொம்மந்தான் நகரைச் சோ்ந்த மூக்கன் மகன் மாயாண்டி (46) என்பவரை போலீஸீல் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக, சாத்தான்குளம் கிராம நிா்வாக அலுவலா் கந்தவள்ளிக்குமாா் புகாரின் பேரில் தலைமைக் காவலா் கவிதா வழக்குப் பதிந்தாா். உதவி ஆய்வாளா் நாகராஜன், ஓட்டுநரை கைது செய்தனா்."

Tags

Next Story