சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்

சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்

திண்டுக்கல்லில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் நடந்தது. 

திண்டுக்கல்லில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் நடந்தது.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கு காா்த்திகை மாதத்தின் 3-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை 108 வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதைத்தொடா்ந்து, மூலவா் கைலாசநாதருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.பின்னா், 108 வலம்புரி சங்குகளில் இருந்த தீா்த்தத்தைக் கொண்டும் அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னா், ஆனந்தவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Tags

Next Story