மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் 
விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

மத்திய அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சங்ககிரியை அடுத்த வளையசெட்டிப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வளையசெட்டிபாளையம் பால்கூட்டுறவு சங்கத்தலைவர் எஸ்.மணி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையில் நடைபெற்றது. இதில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சங்ககிரி வட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

அதில், மத்தியரசு புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும், விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்க கூடாது, அனைத்து வேளாண் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைப்பதை சட்டபூர்வமாக அறிவிக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நான்கு சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story