சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை

சங்ககிரி: அரசிராமணி சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி கிராமத்தில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.

வளர்பிரதோஷத்தையொட்டி அருள்மிகு பெரியநாயகியம்மன் உடனமர் சோழீஸ்வரர் சுவாமிகள், நந்தி பகவானுக்கும், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு சோழீஸ்வரர் பெரியநாயகி அம்மன் நந்தி பகவான் சுவாமிகளை வழிபாடு செய்தனர். .

Tags

Next Story