சங்ககிரி தபால் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
சேலம் மாவட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.