சங்ககிரி: திடீரென பெய்த கோடை மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள தேவூர், அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, ஒடச்சக்கரை, காவேரிப்பட்டி, மோட்டூர், வட்ராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மாலை வேளையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் கோடை வெயிலின் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால் அப்பகுதியில் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story