திண்டிவனத்தில் துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா

திண்டிவனத்தில் துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா
திண்டிவனத்தில் துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா
ஊதியம் வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு குப்பைகளை சேகரிக்க ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்கக்கோரியும் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் நேற்று காலை தர்ணா வில் ஈடுபட்டனர். இவர்களிடம், நகராட்சி அதிகாரிகள் பேச்ச வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், உடனடியாக ஊதி யம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து துப்புரவு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story