கடையம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கடையம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
கடையம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏஐசிசிடியு தூய்மை பணியாளர்கள் முறையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் தினக்கூலி தூய்மை பணியாளர்களுக்கு கூலியை குறைத்து வழங்கியதை கண்டித்து கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட தூய்மை பணியாளர்கள் காவலர்கள் சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன், நிர்வாகிகள், மாரியம்மாள், ஹரிஹரசுதன், சின்னத்தம்பி உள்ளிட்ட ஏராளமான தூய்மை பணியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story