இடங்கணசாலையில் வாரச் சந்தை திறப்பு

இடங்கணசாலையில்  வாரச் சந்தை திறப்பு

வாரச்சந்தை திறப்பு 

இடங்கணசாலையில் ரூ.94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வார சந்தை கடைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சி, காடையாம்பட்டி, சந்தை திடல் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 94 லட்சம் மதிப்பில் புதிதாக வார சந்தை 41 கடைகள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழாவினை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன் பின் இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து, இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், இவ் விழாவில் நகர திமுக செயலாளர் செல்வம், சங்ககிரி தொகுதி பொறுப்பாளர் முருகவேல், நகராட்சி துணை தலைவர் தளபதி, ஆணையாளர் சேம்கிங்ஸ்டன்(பொ), நகராட்சி பொறியாளர் ஜெயலட்சுமி, நகர் மன்ற உறுப்பினர்கள் விஜயா முருகன், நதியா ராஜேந்திரன், சிவக்குமார், இந்திராணி உள்ளிட்ட பலரும் உடனிந்தனர்.

Tags

Next Story