சங்கரன்கோவில் : முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை

சங்கரன்கோவில் : முக்கிய இடங்களில் வெடிகுண்டு  சோதனை
 மோப்ப நாய் சோதனை
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பதற்காக சங்கரன்கோவிலில் உள்ள முக்கிய இடங்களில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரின் முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் போலீஸாா் வெடிகுண்டு சோதனை நடத்தினா். சங்கரன்கோவில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் வாசல் ஆகிய பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளிலும் மோப்ப நாய் கோகோ உதவியுடன் தென்காசி மாவட்ட காவல்துறையின் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா். 22ஆம் தேதி நடைபெறும் ராமா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags

Next Story