சங்கரன்கோவில் மார்கெட் இன்று முதல் இடமாற்றம்

சங்கரன்கோவில் மார்கெட் இன்று முதல் இடமாற்றம்
சங்கரன்கோவில் மார்கெட் இன்றுமுதல் இடமாற்றம்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் காய்கறி மார்கெட் இன்றுமுதல் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் மார்க்கெட் இன்றுமுதல் இடமாற்றம் செய்யப்பட்டது இதில் தற்காலிகமாக புதிய நகராட்சி பகுதி தற்காலிக பேருந்து நிலையம் அருகில் திருவேங்கடம் சாலையில் புதிய மார்க்கெட் இன்றுமுதல் செயல்படுகிறது.

இந்த மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்களும் காய்கறி வியாபாரிகளும் ஆர்வமுடன் காய்கனிகள் வாங்கிச் சென்றனர், சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் கவனத்தில் கொள்ளவும் என நகராட்சி தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story