விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி வழிபாடு

விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி வழிபாடு

சங்கடகர சதுர்த்தி வழிபாடு 

தென்காசி அருகே விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது
தென்காசி அருகே குத்துக்கல்வலசை அருள்மிகு ஸ்ரீ பசி துஷ்ட கண்டராய விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு நேற்று இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகருக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிருதம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டது. நெய்வேத்தியம் படைக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story