மரக்கன்றுகள் நடும் விழா

படாளம் ஊராட்சியில் தனியார் கார் உற்பத்தி நிறுவனம் சார்பில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட படாளம் ஊராட்சியில் உள்ள 5 ஏக்கர் மேக்கால் புறம்போக்கு நிலத்தில்மரக்கன்றுகள் நட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

இதன் காரணமாக இன்று BMW கார் உற்பத்தி நிறுவனம் சார்பில் படாளம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ரவி தலைமையில் 13 லட்சம் மதிப்பீட்டில் நாவல் புங்கை பூவரசன் உள்ளிட்ட 20 ஆயிரம் மரக்கன்றுகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மரம் நன்று நட்டு மரம் நடும் விழாவை தொடக்கி வைத்தார்..

இந்நிகழ்ச்சியில் BMW கார் நிர்வாக இயக்குனர் தாமஸ் தோஷ் கலந்து கொண்டார்.. உடன் மாவட்ட துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story