தென்காசியில் மரக்கன்றுகள் நடும் விழா

தென்காசியில் மரக்கன்றுகள் நடும் விழா
தென்காசியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
தென்காசியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
தென்காசி நகராட்சி தூய்மை நகருக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர். சாதிர் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் கேஎன்எல். சுப்பையா நகராட்சி ஆணையாளர் ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி நகராட்சி தூய்மை நகருக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள், பொது மக்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற் பார்வையாளர், பரப்புரை யாளர்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story