மரக்கன்றுகள் நடும் விழா, எம்எல்ஏ பங்கேற்பு

அதிமுக சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே உள்ள கீழாமூர் ஊராட்சிக்குட்பட்ட பசுவங்கரனை பகுதியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கீழாமூர் அதிமுக நிர்வாகிகள் சார்பில், 500 மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏழை எளிய மக்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்..

Tags

Next Story