தனியார் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தனியார் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தனியார் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கணிதமேதை ராமானுஜன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கள்ளகுறிச்சி இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் மரம் நடும் விழா நடைபெற்றது
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கணிதமேதை ராமானுஜன் பிறந்த நாள் விழா மற்றும் 3 ஊராட்சிகளில் மரக்கன்று நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் வாழ்த்திப் பேசினார். கணிதத்துறை உதவி பேராசிரியர் மனோகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்கள் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வனத்துறை அலுவலர் ரஞ்சிதா, ஊராட்சி தலைவர்கள் சுசீலா குழந்தைவேல், தெய்வீகன், லோகநாதன் பேசினர். நிகழ்ச்சியில் உலகங்காத்தான், எலியத்துார் மற்றும் மேலுார் ஆகிய 3 ஊராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

Tags

Next Story