விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் மரக்கன்றுகள் எரிந்து நாசம்

விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் மரக்கன்றுகள் எரிந்து நாசம்

தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் நடப்பட்டிருந்த மரக்கன்றுகள் எரிந்து சேதம் அடைந்தது.

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி, கஞ்சனுார் அடுத்த திருக்குணம் ஊராட்சியைச் சேர்ந்த கொசப்பாளையம் கிராமத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட அரசு இடமான 27 ஏக்கரில் மா, பலா, பூவரசு, தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான 12,500 மரக்கன்றுகளை ஊராட்சி தலைவர் பிரகாஷ் நட்டு பராமரித்து வருகிறார்.

நேற்று மதியம் 1:00 மணியளவில் இங்கு நடப்பட்டிருந்த மரக்கன்றுகளை மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால், 2 ஏக்கர் அளவிற்கு தீ மளமளவென பரவியது.தகவலறிந்த அன்னியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதில், 700க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் எரிந்து கருகியது.இதுகுறித்து ஊராட்சி தலைவர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story