பருவமழையால் நிரம்பி வழியும் சரபங்காநதி தடுப்பணை

பருவமழையால்  நிரம்பி வழியும் சரபங்காநதி  தடுப்பணை

நிரம்பி வழியும் தடுப்பணை 

சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை பகுதியில் உற்பத்தியாகி வரும் சரபங்காநதி ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி ,எடப்பாடி வழியாக தேவூர் சரபங்காநதி தடுப்பணை வழியாக கடந்து சென்று அண்ணமார் கோவில் பகுதியில் காவேரி ஆற்றில் கலக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காடு மலைப்பகுதியில் அதிகபடியாக பெய்த பருவமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஒடி ஓமலூர் ,தாரமங்கலம் எடப்பாடி, அரசிராமணி,செட்டிபட்டி வழியாக தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிந்து அண்ணமார் கோவில் பகுதியில் காவிரியாற்றில் கலந்தது. இந்நிலையில் கடந்த இருபது ஆண்டு காலமாக சரபங்கா நதி ஆக்கிரமிப்புகளால் பல்வேறு இடங்களில் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. இதனால் தண்ணீர் முழுவதும் தேவூர் சரபங்கா நதி தடுப்பணை வழியாக செல்ல முடியாமல் போனது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சேலம் ஏற்காடு சேர்வராயன் மலை பகுதி மற்றும் சரபங்கா நதி கரையோரப் பகுதிகளில் தொடர் கன மழை பெய்ததால் சரபங்கா நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து தேவூர் சரபங்கா நதி தடுப்பணை வழியாகத் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடி செல்கிறது ,இதனால் தடுப்பணை பகுதியில் உள்ள பெரமாச்சிபாளையம்,வெள்ளக்கல் தோட்டம்,பாங்கிகாடு,சென்றாயனூர்,ஒடசக்கரை,பனங்காடு, கோணக்கழுத்தானூர் ,மயிலம்பட்டி, உள்ளிட்ட பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், மேலும் சரபஙங்கா நதி தண்ணீரை பயன்படுத்தி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, வாழை,தென்னை,மஞ்சள் உள்ளிட்ட பயிர் வகைகள் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் தேவூர் சரபங்காநதி தடுப்பணை வழியாக 6 மாத காலத்திற்கு தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடும் என்பதால் தடுப்பணை வழியாக செல்லும் மயிலம்பட்டி, மேட்டுக்கடை பெரமாச்சிபாளையம் ,சென்றாயனூர் ,உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சறுக்கும் தடுப்பணையில் ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர், எனவே இந்த தடுப்பணை மேல் பாலம் அமைக்க வேண்டும் எனத் தேவூர் சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்,

Tags

Next Story