ஏழு ஆண்டுகளுக்கு பின் கோடநாடு செல்லும் சசிகலா.

ஏழு ஆண்டுகளுக்கு பின் கோடநாடு செல்லும் சசிகலா.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கோடநாடு எஸ்டேட்டிற்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு செல்கிறார்.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கோடநாடு எஸ்டேட்டிற்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு செல்கிறார்.
கோவை:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கோடநாடு எஸ்டேட்டிற்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு செல்கிறார்.2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவும் சசிகலாவும் கோடநாடு பங்களாவில் தங்கி சென்றனர்.பின்னர் டிசம்பர் மாதம் ஜெயலலிதா உயிரிழந்த பிறகு 2017ம் ஆண்டு கோடநாடு பங்களாவில் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.அச்சம்பவம் நிகழ்ந்தது முதல் சசிகலா அங்கு செல்லாமல் இருந்து வந்தார்.இந்நிலையில் அந்த எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்பட உள்ளது. அதன் பூமி பூஜை நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கலந்து கொல்வதற்காக சசிகலா செல்கிறார்.இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக கோடநாடு புறப்பட்டார். அவருடன் இளவரசியும் உடன் சென்றார்.

Tags

Next Story