சூடுபிடித்த தேர்தல் களம் -ஆக்சனில் இறங்கிய சசிகாந்த் செந்தில்

சூடுபிடித்த தேர்தல் களம் -ஆக்சனில் இறங்கிய சசிகாந்த் செந்தில்

தேர்தல் பிரச்சாரம் 

கும்மிடிப்பூண்டி தொகுதியில் களத்தில் இறங்கிய சசிகாந்த் செந்தில்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தீவிர வாக்கு சேகரிப்பை மேற்கொண்டுள்ளார்.கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொது மக்களும்கூட்டம் கூட்டமாக குவிந்து நல் ஆதரவை தெரிவித்து வருகின்றனர் .

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ்அதிகாரியான சசிகாந்த் செந்திலுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, குஜராத்காங்கிரஸ் எம்எல்ஏ ஜிக்னேஷ்மேவானி உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் ஏற்கெனவே வாக்கு சேகரித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை கும்மிடிப்பூண்டி தொகுதி ஈகுவார்பாளையம் பகுதியில் சசிகாந்த் செந்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பரப்புரையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் T.J.கோவிந்தராஜன் MLA,திருவள்ளூர் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளரும் திமுக மாநிலங்களவை உறுப்பினருமான R.கிரிராஜன் , காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் R.M.தாஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள்,நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடர்ந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story