ஊராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது

ஊராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது

பைல் படம் 

சாத்தான்குளம் அருகே ஊராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த  இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் அமுதுண்ணாகுடி ஊராட்சியில் பிளம்பராக சிவபெருமாள் என்பவர் பணியாற்றி வருகிறார். இதனிடையே வடக்கு அமுதுண்ணாகுடியை சேர்ந்த செல்லையா மகன் அருணாசலம் (40) என்பவரது வீட்டில் குடிநீர் இணைப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 15ம்தேதி அருணாசலம், அமுதுண்ணாகுடி ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அங்கிருந்த ஊழியர்களை பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் அங்கு பணியில் இருந்தபஞ்சாயத்து அலுவலக பிளம்பர் சிவபெருமாளை அவதூறாக பேசி தாக்க முயன்றதுடன் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து ஊராட்சி செயலர் ஜார்ஜ் சிங்கத்துரை, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவ் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்குபதிந்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் அருணாசலத்தை கைதுசெய்தார்.

Tags

Next Story