சீர்காழியில் சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கு

சீர்காழியில் சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கு

சீர்காழியில் சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கு

கருத்தரங்கில் சட்டமன்ற துணைத் தலைவர் பிச்சாண்டி, சட்டமன்ற கொறடா கோவி செழியன்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ச.மு.இ மேல்நிலைப்பள்ளியில் , கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, “சட்டமன்ற நாயகர் கலைஞர்" கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,தமிழ்நாடு அரசு தலைமை கொறடா, கோவி.செழியன் ,மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ,சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக, சட்டமன்ற துணைத் தலைவர் கு பிச்சாண்டி ,கலந்து கொண்டு கருத்தரங்கில் வெற்றி பெற்ற பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு, சான்றிதழ்களை வழங்கினார்.இந்தக் கருத்தரங்க நிகழ்ச்சியில் ,சீர்காழி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த, அரசு பள்ளி மற்றும் நகராட்சி பள்ளி, மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story