சேவூர்,விஐபி கார்டன் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மனு

சேவூர்,விஐபி கார்டன் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மனு

மனு அளித்த சங்கத்தினர்

திருப்பூர் மாவட்டம் சேவூர் விஐபி குடியிருப்போர் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் சேவூர் பகுதியில் வி ஐ பி கார்டன் , தேவேந்திரன் நகர் குடியிருப்புகளுக்கு நடுவே , சுவர் அமைந்துள்ளது. இந்த சுவற்றுக்கு அப்பால் 3 பஞ்சாயத்து சாலைகள் இருந்தும் தேவேந்திரன் பகுதி மக்கள் அச்சாலையை பயன்படுத்த முடியாமல் இருப்பதாக கடந்த ஆண்டு மனு அளித்தனர்.

அந்த மனுவின் அடிப்படையில் ஆட்சியர் தீண்டாமை சுவரை அகற்றம் செய்ய உத்தரவிட்ட நிலையில் , இதுவரை அகற்றம் செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் வி ஐ பி கார்டன் பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தங்கள் லே அவுட்டில் அமையப்பெற்றுள்ள சுவற்றை தீண்டாமை சுவர் என அறிவிக்க கூடாது எனவும் நீதிமன்றத்தில் சுவர் மற்றும் தேவேந்திரன் நகர் பகுதியில் உள்ள பாதையும் கேசி பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும்

அதுவரை அந்த சுவற்றை தீண்டாமை சுவர் என அதிகாரிகள் குறிப்பிடக்கூடாது என அம்மனுவில் தெரிவித்துள்ளனர் .

Tags

Next Story