சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சவுக்கு சங்கர் 

பெலிக்ஸ் ஜெரால்ட் மனு மீதான விசாரணை பிற்பகல் நடைபெறுகிறது.

கோவை:பெண் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் அவரை பேட்டி எடுத்த ரெட் பிக்ஸ் என்ற பெயரில் டிஜிட்ட ஊடகம் நடத்தி வரும் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.

இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்னிலையில் இன்று நடைபெற்றது.இதில் சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ரெட்பிக்ஸ் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமின் மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.

Tags

Next Story