குடியாத்தத்தில் சவர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

குடியாத்தத்தில் சவர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே சவர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே வீரத்தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சி மற்றும் சவர தொழிலாளர்கள் சங்கம் சார்பில், சமூக வலைதளங்களில் சவர தொழிலாளர்கள் சமூகத்தை கொச்சைப்படுத்துகின்ற வகையில் பதிவிட்டவர்களை சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வீரத் தியாகி விசுவநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் வி.பி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். கட்சியின் நிறுவனர் எஸ்.கே.செல்வம், மாநில பொதுச்செயலாளர் தட்சிணாமூர்த்தி, மாநில பொருளாளர் தனலட்சுமி, தொழிற்சங்க பொதுச் செயலாளர் நாகராஜன், சவரத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story