பெண்களிடம் நூதன முறையில் பண மோசடி

பெண்களிடம் நூதன முறையில் பண மோசடி
பெண்ணிடம் மோசடி 
வந்தவாசி அருகே பெண்களிடம் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தில் கார்த்திக், சுரேஷ் ஆகிய இருவரும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,20,000 கடன் தருவதாக கூறி பல பெண்களிடம் ரூ.1650 வைப்புநிதி பணம் கட்ட வேண்டும் என்று கூறி வசூல் செய்து தலைமறைவாகி விட்டனர்.

அவர்களை தொடர்பு கொண்ட மக்கள் அழைப்பை ஏற்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று அறிந்த பெண்கள் வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story